Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சொர்ணகுமார் சொரூபன்
உள்ளக விசாரணை என்பதை தவிர்த்து, சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு அனைவரும் குறிப்பாக இந்திய தமிழக உறவுகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்தியாவின் பங்களிப்பு கட்டாயமாகவிருக்கின்றது. இதற்கு தமிழகத்தின் அழுத்தங்கள் கட்டாயமாகவிருக்க வேண்டும்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் உள்ளக விசாரணை நடைபெறுவதற்கு அமெரிக்க உதவிகள் செய்யும் எனக்கூறியிருந்தார். இது நமக்கு கவலையளிக்கின்றது. எமக்கு உள்ளக விசாரணை வேண்டாம்.
சர்தேவ விசாரணையில் நாங்கள் கோரிய பொறுப்புக்கூறல், சர்வதேச தீர்ப்பு, இனப்படுகொலை விசாரணை என்பவற்றுக்கு என்னவாகும் என்னும் நிலை தற்போது கேள்விக்குறியாகவுள்ளது.
எனது கட்சியான ரெலோ அமைப்பின் நிலைப்பாடு, சர்தேச விசாரiணை வேண்டும் என்பதாகும். இதுதவிர பங்காளிக் கட்சிகளுடான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. அதன் முடிவுகளும் விரைந்து அறிவிக்கப்படும்.
தமிழரசுக் கட்சி மட்டும் கூட்டமைப்பு என்னும் அடிப்படையில் சந்திப்புக்களில் கலந்துகொண்டால், அதில் எமது கட்சி இனிவருங் காலங்களில் கலந்துகொள்ளாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago