Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடக்கு விவசாய அமைச்சின் 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி, மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (02) மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
நல்லூர் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கண்காட்சியை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.
அளவுக்கு மிஞ்சிய செயற்கை உரங்களினதும் இரசாயனக் களை கொல்லிகளினதும் பயன்பாட்டினால், உடல்நலம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. விவசாய இரசாயனங்களின் வரம்பு மீறிய பாவனையால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சூழலுக்கு இசைவான பயிர்ச்செய்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கோடு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியில், இரசாயன உரவகைகள் மற்றும் பீடைகொல்லிக்கு மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சேதனப் பசளைகள், சேதன பீடைநாசினிகள், ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், நிலத்தடிநீர் முகாமைத்துவம், பண்ணை இயந்திரங்கள், அருகிவரும் பயிர்களும் பழங்களும், பாரம்பரியப் பயிரினங்கள், காளான் வளர்ப்பு போன்றவற்றுடன் தொடர்பான காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடுகைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கைப் பழரச மென்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
27 minute ago