Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 இந்திய மீனவர்களும் பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களால் திங்கட்கிழமை (14) விடுதலை செய்யப்பட்டனர்.
காரைநகருக்கு அண்மிய கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் விடுதலை செய்தார்.
வடமராட்சி கட்டைக்காடு கடற்பரப்பில் 1 படகுடன் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா விடுதலை செய்தார்.
இவர்கள், தமிழகத்தின் இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கடந்த 1ஆம் திகதி கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றங்களால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago