2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

84 பனைமரக் குற்றிகள் மீட்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பளை, தர்மங்கேணி காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட 84 பனை மரக்குற்றிகளை இன்று வியாழக்கிழமை (22) மீட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி பகுதியைச் சுற்றிவளைத்த போது, இந்த பனை மரக்குற்றிகள் மீட்கப்பட்டன. ஓரளவுக்கு வளர்ந்த சிறிய பனைகள் வெட்டப்பட்டு குற்றிகளாக்கப்பட்டுள்ளன.

எனினும் இது தொடர்பில் எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் கூறினர். மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X