2025 ஜூன் 28, சனிக்கிழமை

32 பாடசாலைகளுக்கு 171 வகுப்பறைகள் தேவை

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள 32 பாடசாலைகளுக்கு 171 வகுப்பறைகள் தேவையாகவுள்;ளதாக மாவட்ட செயலகத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள நான்கு கோட்டக்கல்வி அதிகாரிகள் பிரிவுகளிலும் உள்ள 112 பாடசாலைகளில் 8 பாடசாலைகள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் 104 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன.

இவற்றில் 32,112 வரையான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். மேற்குறித்த 104 பாடசாலைகளிலும் குறிப்பிட்ட சில பாடசாலைகளில், ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், கல்வித்துறையில் அடையாளம் காணப்பட்ட பொதுவான தேவைகள் தொடர்பாக மாவட்ட செயலகத்தின் புள்ளி விவரத்தில் 32 பாடசாலைகளில் 171 வகுப்பறை, 17 பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள், 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகள், 26 கணனி கற்கை நிலையங்கள், 23 பாடசாலைகளில் நூலக வசதிகள், 11 பாடசாலைகளில் 64 மலசலகூடங்கள், 20 பாடசாலைகளில் தண்ணீர் வசதிகள் தேவையாகவுள்ளதாக இப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்;பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .