2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

50 ரூபாய்க்கு முடிவெட்டும் இராணுவத்தினர்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் இராணுவத்தினரால் சிகையலங்கார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில், முறுகண்டி, இரணைமடுச்சந்தி, இயக்கச்சி ஆகிய இடங்களில் இந்த சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருகின்றன.

மாவட்ட சிகையலங்கார சங்கத்தின் கீழுள்ள சிகையலங்கார நிலையங்களில் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையில் சிகையலங்காரத்துக்கு கட்டணம் அறிவிடப்படும் நிலையில், இராணுவத்தினரின் சிகையலங்கார நிலையத்தில் 50 ரூபாய்க்கு சிகையலங்காரம் செய்ய முடியும்.

இராணுவத்தினரின் தேவைக்காக அமைக்கப்பட்ட இந்த சிகையலங்கார நிலையங்களில், கட்டணம் குறைவு காரணத்தால் பொதுமக்களும் செல்கின்றனர்.

இராணுவத்தினர் சிகையலங்கார நிலையம் நடத்துவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சிகையலங்கார சங்கத் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் செவ்வாய்க்கிழமை (09) முறைப்பாடு செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X