2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விபத்தை ஏற்படுத்தியவருக்கு அபராதம், நஸ்டஈடு விதிப்பு

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கவனயீனமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தி, ஒருவரைக் காயமடையச் செய்த நபருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன்  காயமடைந்த நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் கறுப்பையா ஜீவராணி, வியாழக்கிழமை (03) பிறப்பித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற இந்தவிபத்தில் அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். 

இந்தச் சம்பவத்தில் புத்தூர் வடக்கைச் சேர்ந்தவருக்கு எதிராக அச்சுவேலி பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இதில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அவருக்கு மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X