2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ்.மாவட்டத்தில் 'ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு' திட்டத்திற்காக 161 பேர் விண்ணப்பிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 27 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                          (ரஜனி)
'ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு' திட்டத்தினை பெற்றுக்கொள்ள யாழ்.மாவட்டத்தில் வங்கிகளினூடாக 161 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ் வீட்டுத்திட்ட கடனுதவியாளர்களுக்கு 67.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியூடாக விண்ணப்பித்த 74 பேருக்கு 31.9மில்லியன் ரூபாவும் இலங்கை வங்கியூடாக விண்ணப்பித்த 87 பேருக்கு 35.9 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மக்கள் வங்கியூடாக விண்ணப்பித்தவர்களில் 38 பேர் புதிய வீடுகளுக்காகவும் 36 பேர் தரமுயர்த்துதலுக்காகவும் விண்ணப்பித்துள்ளனர். இலங்கை வங்கியூடாக விண்ணப்பித்தவர்களில் 19 பேர் புதிய வீடுகளுக்காகவும், 43 பேர் தரமுயர்த்துதலுக்காகவும் விண்ணப்பித்துள்ளார்கள்.

2012 டிசெம்பர் மாதத்திற்குள் புதிய வீட்டினை அமைத்து முடிக்கவுள்ள வீட்டுக் கடனுதவியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .