2025 ஜூன் 21, சனிக்கிழமை

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களிடம் 381,500 ரூபா வசூல்

Super User   / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

காலாவதியான பொருட்கள் விற்பனை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளளான வர்த்தகர்களிடம் சுமார் 381,500 தண்டம் பணம் அறவிட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் ஐந்து நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் செப்டெம்பர் மாத கால பகுதியில் பாவணையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த 110 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களில் 77 பேர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 381,500 ரூபா தண்டம் அறவிடப்பட்டதாகவும், நீதிமன்றிற்கு சமூகமளிக்காதவர்களுக்கான வழக்கு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .