2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெற 761 பேர் விண்ணப்பித்துள்ளனர்: தொழில் திணைக்களம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். மாவட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெறுவதற்கு 761 அங்கத்தவர்களின் விண்ணப்பங்கள் உலக வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் நீலலோஜினி கேதீஸ்வரன் இன்று தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 761 பேரில், ஜனவரி 80, பெப்ரவரி 80, மார்ச் 127, ஏப்ரல் 64, மே 92, ஜூன் 88, ஜூலை 71, ஓகஸ்ட் 66, செப்டெம்பர் 93 பேரும் ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இத்திட்டத்தில் 4 வகையான பிரிவுகளில் ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெற முடியும்.

அந்தவகையில், 55 வயதை பூர்த்தியடைந்தவர்கள் 663 பேரும், திருமணத்திற்காக 31, மருத்துவ சான்றிதழ்கள் 7 அரசாங்க உத்தியோகங்கள் பெற்றவர்கள் 60 பேரும் ஊழியர் சேமலாப நிதியினை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .