2025 ஜூன் 21, சனிக்கிழமை

பட்டதாரி பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு 200 பேர் சமுகமளிப்பு

Super User   / 2012 செப்டெம்பர் 15 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                    (ரஜனி)
 
2010 , 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  பட்டம் பெற்றவர்களை பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தில் உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வில் 200 பேர் தோற்றியுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலரின் அறிவுறுத்தலுக்கு இணங்க  2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அங்கிகரீக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நேர்முகத்தேர்வில்,  பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், மருதங்கேணி, சாவகச்சேரி, உடுவில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு இன்றும், யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய் சங்கானை, காரைநகர், நெடுந்தீவு ஊர்காவற்துறை வேலணை போன்ற பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு நாளையும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

தெரிவாகும் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்படுமெனவும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .