2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். பொலிஸ் நிலையத்திற்கு 3 மோப்ப நாய்கள் வழங்கல்

Super User   / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

பொலிஸ் திணைக்களத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு மூன்று மோப்ப நாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மூன்று  மோப்ப நாய்களும், யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கொலைகள் மற்றும் கொள்ளை மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் இந்த மோப்ப நாய்களை கொண்டு சென்று விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .