2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் சட்டவிரோத மின் பாவனையாளர்களிடம் 62 லட்சம் ரூபா வசூல்

Super User   / 2013 மே 08 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 16 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டமையினால்  6,254,679 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட மின்சார சபை பொறிலியலாளர் ஞானகணேசன் இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 2013 ஏப்ரல் வரையான கால பகுதியில் பரிசோதனை மேற்கொண்ட போது, மீற்றரில் திருத்தங்கள் மேற்கொண்டவர்களும் மின்சார கம்பிகளில் கொளுக்கி மூலம் சட்டவிரோத மின்சாரம் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவர்கள் யாழ்பாணத்திலுள்ள ஐந்து நீதிமன்றங்களில் அவர்களை ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளையில் நீதிவான்களினால் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் அச்சுவேலி, குடத்தனை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, அல்வாய், பருத்தித்துறை, கரவெட்டி, புத்தூர், புலோலி, கற்கோவளம், நீர்வேலி, உடுப்பிட்டி, போன்ற பிரதேசங்களில் மீற்றரில் திருத்தங்கள் மேற்கொண்டு மின்சாரம் பெற்ற 12 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டதில் 5,882,79.90 ரூபாவும் மின்சார கம்பிகளில் இருந்து  கொளுக்கி மூலம் சட்டவிரோத மின்சாரம் பெற்ற நான்கு பேருக்கு 37,188 ரூபாவும் தண்டம் அறவிடப்பட்டதுடன் 16 பேரிடமும் மொத்தமாக 6,254,679 ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .