2025 மே 19, திங்கட்கிழமை

நயீனாதீவு பிரதேசத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வழங்க நடவடிக்கை: தவிசாளர்

Super User   / 2012 ஜூலை 02 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

நயீனாதீவு பிரதேசத்திற்கு விரைவில் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவாராசா தெரிவித்தார்.

இதற்காக கொழும்பில் இருந்து மின் பிறப்பாக்கி நயீனாதீவுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"அத்துடன் இதுவரை காலமும் நயீனாதீவுப் பிரதேசத்திற்கு காலை 9 மணி தொடக்கம் 2 மணி வரையிலும் மாலை 6 மணியில் இருந்து 12 மணி வரையும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இதனால் இப்பகுதியில் வாழந்த மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும் குறுகிய காலத்தில் இந்தப்பிரதேசம் முழுவதற்கு 24 மின்சாரம் வழங்கப்படும் என" அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X