2025 மே 17, சனிக்கிழமை

மரத்திலிருந்து தவறி வீழ்ந்து 6 பிள்ளைகளின் தந்தை பலி

Kogilavani   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.கோண்டாவில் கிழக்கு குமரன் கோட்டப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை வேம்பு மரம் தறித்துக் கொண்டு இருந்த நிலையில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோயிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சற்குணம் (வயது 42) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக மானிபாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .