2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வடமராட்சிப் பகுதியில் சட்டவிரோதமாக  மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும்  9 பேரை சனிக்கிழமை  (08) இரவு கைதுசெய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாரும் யாழ். மாவட்டத்தின் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய சோதனையின்போது கம்பர்மலை, கெருடாவில், கொம்மாந்துறை, வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் மீது  எதிர்வரும் 12ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .