2025 ஜூன் 21, சனிக்கிழமை

காணாமல் போன 13 வயது சிறுவன் மீட்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கரவெட்டி கரணவாய் பகுதியில் காணாமல் போன 13 வயதுடைய சிறுவனை மீட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ்  தெரிவித்தார்.

16 ஆம் கட்டை கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி நிலக்ஷன் (வயது 13) என்ற சிறுவன் கடந்த 10 ஆம் திகதி காணாமல் போனதாக அவரது சகோதரி  கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து மீட்டுள்ளதாக சிறுவனின் சகோதரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், முறைப்பாட்டினையும் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .