2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வீதி புனரமைப்புக்காக 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.வல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வீதிப் புனரமைப்புக்கு 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஆலயத்திற்குச் செல்லும் மூன்று வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு விஜயம் செய்த துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கல் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல இந்த வீதி புனரமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரிற்கு உத்தரவிட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆலயத்தின் உள் வீதிப் புனரமைப்புக்குரிய மதிப்பீடுகளையும் செய்யுமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .