2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர் 4 பேரும், நெடுந்தீவு மீனவர்கள் 2 பேரும் போதைப் பொருளுடன் கைதுசெய்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

இந்திய மீனவர்கள் 4 பேர் படகில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததுடன், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களுக்கு போதைப்பொருளை கைமாற்றும்போதே இந்திய மீனவர்கள் 4 பேரும் இலங்கை மீனவர்கள் 2 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 6 மீனவர்களையும் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரையும் நெடுந்தீவு பொலிஸார் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .