2025 ஜூன் 21, சனிக்கிழமை

புலம்பெயர் தமிழர்கள் மாதாந்தம் 10 டொலர்களை வழங்கினால் 1893 வீடுகள் கட்டலாம்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , பி.ப. 03:21 - 3     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் இங்குள்ள மக்களுக்கு மாதாந்தம் 10 டொலர் வழங்கினால் மாதந்தம் 1893 வீடுகள் கட்டலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்டச் செயலத்தில் நடைபெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் நாடுகளில் 80,000 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதந்தம் 10 டொலரை இங்கு அனுப்பினால் இங்குள்ள மக்களிற்கு மாதந்தம் 1893 வீடுகள் கட்டிக்கொடுக்க முடியும்.

கடந்த காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது பணத்தினை அழிவுக்காக வழங்கினர். இனி அந்தப் பணத்தினை ஆக்கத்திற்காக பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

அவ்வாறு முன்வருகின்ற போது ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் ஊடாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 3

  • Mohideen Friday, 28 September 2012 11:32 PM

    1893 வீடு கட்டலாம்,மேலும் எவ்வளவு ஊழல் இடம்பெறும்...?

    Reply : 0       0

    Mohan Saturday, 29 September 2012 03:57 AM

    மக்களுக்கு 1893 வீடுகளும் கிடைக்கும் என்பதில் பிரச்சினை இல்லை... நல்லது! ஆனால் மக்களுக்கு உதவ புலம் பெயர்ந்த மக்கள் தயார் என்றாலும் அந்த வீடுகளும் மக்களிடம் கிடைக்கும் என்று என்ன உத்தரவாதம் இருக்கின்றது???

    Reply : 0       0

    Haniff Saturday, 29 September 2012 05:31 AM

    10 டொலர் என்ன சார் 10 டொலர், 100 டொலர் கூட அனுப்புவாங்க அமைச்சர் அவர்களே! ஆனா அதுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமல்ல...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .