2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1,250 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 12 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 1,250 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் வடமாகாணத்;தில் தெரிவுசெய்யப்பட்ட 1,147 மாணவர்களுக்கும் ஆளுநர் நிதியத்தின் விசேட கொடுப்பனவுக்காக தெரிவுசெய்யப்பட்ட 103  மாணவர்களுக்குமே இவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்;டபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இம்மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.

2013ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், வடமாகாணத்தில் 12 கல்வி வலயங்களைச் சேர்ந்த 1,147 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.  ஒவ்வொரு மாணவருக்கும் 6,000 ரூபா படி  கொடுப்பனவு வழங்கப்பட்டது.  இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கென 6.8 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபா முதல் 6,000 ரூபா வரை அவர்களின் நிலைக்கேற்ப ஒரு வருடத்;திற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இத்திட்டங்களைச் செயற்படுத்தி  மாணவர்களை தெரிவுசெய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. யுத்தப் பாதிப்புக்கள், குடும்ப நிலைமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு வடமாகாண கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .