2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அடகு வைக்கப்பட்ட 13 வாகனங்கள் மீட்பு; இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஜூலை 15 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வாடகைக்கு அமர்த்தப்பட்டு அடகு வைக்கப்பட்ட 13 வாகனங்கள் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன நிலையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இருவரும் யாழ் நீதவான் கோ.சிவகுமார் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்திய போது அவ்விருவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடவத்தையை சேர்ந்த வாகன உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையில் 13 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .