2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் கடந்த வாரத்தில் 137பேர் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி, கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மாத்திரம் சிறு குற்றச் செயல்கள் புரிந்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ.குகநேசன் இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் 101 சிறு குற்றங்களும், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 37 சிறு குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், யாழ்ப்பாணம் பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 21 பேரும், மது போதையில் தகராறு செய்தவர்கள் 29 பேரும், கஞ்சா வைத்திருந்த ஒருவரும்;, அனுமதி இல்லாமல் சாராயம் விற்பனை செய்த மூவரும், சட்ட விரோத மணல் ஏற்றுமதி ஒருவரும்;, சட்ட விரோதமாக பனை மரம் தறித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், குழுக்களிடையே தகராறு காரணமாக சிறு காயங்களுக்குள்ளாக்கப்பட்டவர்கள் 30 பேரும், பண மோசன்யில் ஈடுபட்டவர்கள் இருவரும், சூழல் மாசடையும் விதமாக குப்பைக்கூழங்கள் வீசியவர்கள் ஜவரும்;, சந்தேகத்திற்கு இடமாக நடமாடியவர்கள் 7 பேரும், சாலை விபத்துடன் சம்பந்தபட்ட ஒருவர் உட்பட 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, காங்கேசன் துறை பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 14 பேரும், அனுமதியின்றி கள்ளு விற்பனை செய்த ஒருவரும், அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்த ஒருவரும், குழுக்களிடையே ஏற்பட்ட தகராறின் போது சிறு காயங்களுக்குள்ளாக்கப்பட்டவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்திற்கு இடமாக நடமாடியவர்கள் 7 பேரும், சட்ட விரோதமாக பனை மரம் தறித்த ஒருவரும்;, மதுபோதையில் தகராறு செய்தவர்கள் 5 பேர் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .