2025 ஜூன் 21, சனிக்கிழமை

மகாத்மா காந்தியின் 143ஆவது பிறந்த தினம் யாழில் அனுஷ்டிப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இந்தியாவின் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 143ஆவது பிறந்த தினம் இன்று செவ்வாய்கிழமை யாழில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள காந்தியின் உருவச்சிலையடியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இன்று காலை 10 மணிக்கு காந்தியின் உருவச்சிலைக்கு அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருமான இராசநாயகம் மற்றும் தாதியர் பயிற்சிக்கல்லூரி அதிபர் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தாதியர் பயிற்சிக்கல்லூரி மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .