2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அருணாசலம் தங்கதுரையின் 16ஆவது நினைவு தினம்

Menaka Mookandi   / 2013 ஜூலை 05 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


அமரர் அருணாசலம் தங்கதுரையின் 16ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இன்று மாலை 5.00  மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

1997 ஆம் ஆண்டு  திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியின் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு விழாவின் நிறைவின் போது குண்டுத் தாக்குதலினால் பலியானார்.

யாழ். மாநகர சபை உறுப்பினர் இரா. சங்கையா, முன்னாள் மாநகர சபை முதல்வர் செல்லன் கந்தையன், உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வைத்ததுடன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மதியழகராசா மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் அரசியல் நினைவலைகளை பகிர்ந்து கொண்டதுடன், மலர் மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை உயிர்நீத்த பாடசாலை அதிபர் உட்பட உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .