2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வன்னி ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான விசாரணை ஓகஸ்ட் 2இல் ஆரம்பம்: ரி.கனகராஜ்

Menaka Mookandi   / 2012 ஜூலை 25 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

வன்னி ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  விசாரணைகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதியில் நடைபெறவள்ளதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விசாரணை தொடர்பாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எற்கனவே விசாரணைக்கு சமூகமளிக்காததினால் விசாரணை பின்னுக்கு தள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் இ.ஜே.லெஸ்லி கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .