2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் நீக்கம்

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதனால், கட்சியின் அச்சுவேலி இணை இணைப்பாளரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான லிங்கேஸ் என்று அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை செல்வராசா மற்றும் ஆசைப்பிள்ளை சுசீந்திரன் ஆகிய இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களுமே நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஈ.பி.டி.பியின யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி மகலேந்திரன் உறுதிப்படுத்தினார். கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு மீறி இந்த இரண்டு உறுப்பினர்களும் செயற்பட்டமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .