2025 ஜூன் 21, சனிக்கிழமை

இராணுவப் பயன்பாட்டில் இருந்த 29 ஏக்கர் காணி விடுவிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தென்மராட்சி பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டில் 17 வருடங்களாக இருந்த 29 ஏக்கர் காணியும் 10 வீடுகளும்; பின்னர் இன்று திங்கட்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எழுதுமட்டுவால் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோர் கலந்துகொண்டு காணி மற்றும் வீடுகளை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.

1996 ஆம் ஆண்டு தொடக்கம் தென்மராட்சி பிரதேசத்தில் கெற்பலி, மந்துவில், சங்கரத்தை, வரணி, எழுதுமட்டுவால் ஆகிய பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள்  17 வருடங்களுக்கு பின்னர் 53 பேரிடம் மீளக்கையளிக்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0

  • KB Monday, 02 September 2013 06:45 AM

    கிளாலியில் எமது காணிகளை கடற்படை விடவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .