2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 3,800 மலசலகூடங்களை அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 11 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களினுடைய மலசலகூடப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் முகமாக 3,800 மலசலகூடங்களை  உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கையை சமுர்த்தி அதிகாரசபை மேற்கொள்ளவுள்ளது.

யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கும் வடமாகாண ஆளுநரின் தலைமையில் சமுர்த்தி ஊழியர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் தற்போது மீள்குடியேற்றம் நடைபெறும் பகுதிகளான மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 600 மலசலகூடங்கள் வீதம் 1,200 மலசலகூடங்களும் ஏனைய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்களில் தலா 200 மலசலகூடங்கள் வீதம் 2,600 மலசலகூடங்களும் அமைக்கப்படவுள்ளன.

சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களினால் உரிய பயனாளிகள் இன்னும் இரு  நாட்களுக்குள் தெரிவுசெய்யப்பட்டு மலசலகூடங்கள் அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X