2025 ஜூன் 18, புதன்கிழமை

செனல் 4 தொலைக்காட்சி இலங்கையை விலை பேசுகிறது: ஹத்துருசிங்க

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 23 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'போர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது' என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார்.

'யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் காணிகளை அபகரிப்பதாக மக்களை பயப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அமைதி இருக்க வேண்டுமானால் அரச நிறுவனங்கள் முழுமையாக செயற்பட வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'படைகளின் செயற்பாடு மக்களின் அமைதியை மேம்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதற்காக எமது படையினர் பாடுபடுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதாக கூறி மக்களை போராட்டத்திற்கு அழைத்து பூச்சாண்டி காட்டுகின்றார்.
 
அத்துடன், அரசியல்வாதிகள் இன குரோத்தினை ஏற்படுத்தி அமைதியை குழைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்' என்று யாழ். கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • vallarasu Saturday, 23 February 2013 04:14 PM

    ஐயா நீங்கள் சொல்லுறதுதான் சட்டம்.

    Reply : 0       0

    vallarasu Saturday, 23 February 2013 04:24 PM

    விலை அவர்கள் பேசவில்லை.

    Reply : 0       0

    vallarasu Sunday, 24 February 2013 04:59 AM

    யார் விலை பேசுவது நீங்களா அவர்களா?//

    Reply : 0       0

    M.A.A.Rasheed Sunday, 24 February 2013 12:52 PM

    நாட்டில் குழப்பத்தை ஏர்ப்படுத்துபவர்கள் யார் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .