2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஒரே நாளில் 4 வீடுகள் கடையொன்றும் உடைக்கப்பட்டு கொள்ளை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மடவளையில் இன்று  வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஆறு வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளையிலேயே இந்த சம்பவங்கள் இடம்டிபெற்றுள்ளன.

மடவளைப் பள்ளி வீதியில் உள்ள ஐந்து வீடுகளும், ஒருகடையும் உடைக்கப்பட்டுள்ளதாக வத்துகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இரண்டு தினங்களுக்கு முன்பு இதே மடவளையில் எதிரெதிரே இருந்த மதீனா மத்திய கல்லூரி மற்றும் ஜூம்மா பள்ளி என்பவற்றின் காரியாலய அறைகள் உடைக்கப் பட்டிருந்தன.

பள்ளியில் இருந்து மட்டும் பல இலட்சம் ரூபா திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. அனேகமான பணம் அன்பளிப்புக்கள் மற்றும் ஸகாத் பணம் என்ற படியால் அவற்றை அன்பளிப்புச் செய்தவர்கள் பொதி செய்துகொடுத்துள்ளதாகவும் அவை உடைக்கப்பட முன்னே திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .