2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில். பெய்த கடும் மழையால் ஒருவர் பலி; 4,756 குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். மாவட்டத்தில் பெய்த கடும் மழையில் 4,756 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் பெய்த கடும் மழையினால் நெடுந்தீவு, நாவாந்துறை, நெடுக்குளம், பருத்தித்துறை போன்ற பகுதிகளில் 4,756 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்த அரச அதிபர், மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறினார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .