2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வட மாகாணத்தில் 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

உப பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயிற்சி நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சி பெற்ற தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றுடன் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு, இன்று யாழ்ப்பாணத்துக்கு நியமனம் பெற்று வருகை தந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் வட மாகாணத்தில் கடமையாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .