2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75வது பிறந்ததினம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75ஆவது பிறந்த தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்.திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது.

குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த குழுவின் ஏற்பாட்டில், புதல்வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எஸ்.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின்  புதல்வரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மங்கள விளக்கேற்றியதுடன் குமார் பொன்னம்பலத்தின்  திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பங்குத்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார் சிறப்புரை ஆற்றியதுடன், 'தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்' என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குமார்வடிவேல் குருபரன் நினைவுப் பேருரை ஆற்றினார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .