2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். சிறையிலிருந்து 9 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா,-எஸ்.கே.பிரசாத்

யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 9 பேர் இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தையொட்டி இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

8 ஆண்களும் ஒரு பெண்ணும் யாழ். சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

65ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் முகமாக ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் தண்டம் செலுத்த முடியாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 130 கைதிகளும் பூஸா சிறைச்சாலையிலிருந்து 140 கைதிகளும் யாழ். சிறைச்சாலையிலிருந்து 9 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஏ.சி.பெரேரா இன்று தெரிவித்தார்.

இன்றையதினம் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .