2025 ஜூன் 21, சனிக்கிழமை

10 விதவைகள் வடக்கு தேர்தலில் போட்டி

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 02 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 'விதவைகள் முன்னணி' என்ற சுயேட்சைக் குழுவில் 19 வேட்பாளர்கள் அடங்குவதுடன் அவர்களில் 10பேர் விதவைகளாவர்.

தம்பிப்பிள்ளை இருதயராணி என்பவரே இந்த சுயேட்சைக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். தனது கட்சி தொடர்பில் அவர் கூறியதாவது,

"பெண்கள் என்ற ரீதியில், வட மாகாணசபை அதிகாரத்தைக் கோருவதற்கு தீர்மானித்தோம். விசேடமாக, விதவைகள், அவர்களின் குழந்தைகளுக்காக பாடுபடுவோம். இன்று அரசியல் செய்யும் கட்சிகள் பெண்களுக்காக குரல் எழுப்புவதில்லை.

இப்போதைக்கே எமது குழுவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளோமாம். எதிர்க்கட்சியிடமிருந்தும் பணம் பெற்றதாக பொய்ப் பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது எவ்வாறாயினும், பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த சவாலை வெற்றிகொள்வோம்' என்றார்.

'இன்று இந்த நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. மாகாணசபையினூடாக வடக்கிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை மிகவும் பலம்பொருந்தியவர்களாக மாற்றுவதாகும். அவர்களுக்காக நாம் குரல் கொடுப்போம். தேர்தல் சட்டத்துக்கு மதிப்பளித்து பிரசார நடவடிக்கைகளில் பெண்களே ஈடுபட்டு வருகின்றோம். ஆனால், யாழ்ப்பாணத்துக்குள் தேர்தல் சட்டம் மீறப்படுகின்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'வட மாகாணசபை உருவாவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கென முன்வந்துள்ள கட்சிகள் எவையும் பெண்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் வேலைத்திட்டமொன்றை முன்வைக்கவில்லை' என்று விதவைகள் முன்னணியின் தலைவி தம்பிப்பிள்ளை இருதயராணி மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் சுயேட்சைக் குழுவான விதவைகள் முன்னணியின் உறுப்பினர்கள், அம்மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கி தேர்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .