2025 ஜூன் 23, திங்கட்கிழமை

14 பவுண் தங்க நகைகளை திருடிய 7 பேர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 26 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                    (ரஜனி)
நல்லூர் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் 14 பவுண் தங்க நகைகளை திருடிய 7 பேர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

4 பெண்கள் உட்பட 3 ஆண்கள் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, யாழ்.நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் வைத்து மேற்படி 7பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .