2025 ஜூன் 18, புதன்கிழமை

15 வயது சிறுமி வல்லுறவு: இளைஞர்கள் இருவர் தலைமறைவு

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

நலன்புரி முகாமில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அதே முகாமைச்சேர்ந்த இரு இளைஞர்கள் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி தனிமையில் இருந்த போதே குறித்த இரு இளைஞர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தற்காலிக வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இக்குற்றத்தை புரிந்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியிலுள்ள இடம்பெயர் நலன்புரி முகாமில் வசித்து வந்த  சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .