2025 ஜூன் 19, வியாழக்கிழமை

183 மூன்று குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

'யாழ்.மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 183 மூன்று குடும்பங்களுக்கு  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி உதவியுடன் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன'   என்று செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்.மாவட்ட கிளை தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இன்றும்கூட மலசலகூட வசிதிகள் அற்ற நிலமை காணப்படுகின்றது.

பருத்தித்துறை பிரதேசத்தில் தொன்னூறு ஆயிரம் ரூபா பெறுமதியில் தலா 138 மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மக்கள் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வளலாய் கிராமத்தில் உள்ள நாற்பத்தைந்து குடும்பங்குளுக்கு நாற்பது மில்லியன் ரூபா செலவில் 45 மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவைகளை விட பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதின்நான்கு பாடசாலைகளுக்கு பதினாலு மில்லியன் ரூபா செலவில் மலசலகூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .