Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு, மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் நேற்று (25) உத்தரவிட்டார்.
குறித்த நபர் தனது உடமையில், இரண்டு கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில், நேற்று முற்படுத்தப்பட்டபோதே, தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார். அதன்போது, குறித்த நபர் இதற்கு முன்னரும் இதே குற்றத்துக்கு மன்றில் தண்டம் செலுத்தினார் என்று மன்றுக்கு பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
அதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதவான், மீளவும் அதே குற்றத்தில் ஈடுபட்டதால் குற்றவாளிக்கு 3 மாத சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தார். அத்துடன், குற்றவாளி 3,000 ரூபாய் தண்டம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago