2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

உதயன், வலம்புரிக்கு எதிராக இராணுவ தளபதி வழக்கு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் சார்பில் சட்டத்தரணி உபேந்திர குணசேகரவினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

கடந்த ஜுலை 11ஆம் திகதி மேற்படி இரு நாளேடுகளிலும் வெளியிடப்பட்ட  செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 100 மல்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் கூறினார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறினார். (எம்.எம்)

You May Also Like

  Comments - 0

  • Sumathy m Saturday, 24 November 2012 01:54 PM

    பாவம் தமிழ் மக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .