2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விளி வெண்படல நோயினால் பாதிப்புற்றோருக்கு இலவச சிகிச்சை

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பார்த்திபன்)

யாழ்ப்பாணத்தில் 'கற்றாக்' (விளி வெண்படல) நோயினால் பாதிப்புக்குள்ளானோருக்கு இலவச சத்திர சிகிச்சையை வழங்குவதற்கு யாழ். விழிப்புலனற்றோர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது 'கற்றாக்' நோயால் பாதிப்புக்குள்ளான பலர் பொருளாதார வசதியின்மை காரணமாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ளமுடியாதுள்ளனர். இதனால் பலர் தம் கண் பார்வையை முற்றாக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்நிலையை மாற்றும்வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இலவச 'கற்றாக்' சத்திரசிகிச்சையை மேற்கொள்ள யாழ். விழிப்புலனற்றோர் சங்கம் முன்வந்து, அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. எனவே இலவசமாக 'கற்றாக்' சத்திரசிகிச்சையை மேற்கொள்ள விரும்புவோர் தமது பெயர், விபரங்களை யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X