2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் காணிகள் அரசுடமையாகலாம்: யாழ். அரச அதிபர்

Super User   / 2011 ஜூலை 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமராட்சி கிழக்கு பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படாவிட்டால் காணிகள் எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமாகிவிடும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

அண்மையில் வடமராட்சி கிழக்கு பகுதியில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் 519 வீடுகள் தேவைப்படுவதாகவும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்து குறித்த பகுதி மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போக்கறுப்பில் 140 வீடுகளும் வெற்றிலைக்கேணியில் 230 வீடுகளும் மருதங்கேணியில் 149 வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் அத்தியவசிய சேவைகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X