2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இரா.சம்பந்தன் தலைமையில் யாழில் தேர்தல் பிரசார கூட்டங்கள்

Menaka Mookandi   / 2011 ஜூலை 07 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அடுத்த சில தினங்களில் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து குடாநாட்டின் பல இடங்களிலும் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு யாழ்ப்பாணம் செல்லதிட்டமிட்டுள்ளனர்.

அதேநேரத்தில்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிருமான வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து குடாநாட்டில் பரவலாகவே பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X