Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 08 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியானது இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கல்வி எவ்வளவு பலவீனமானது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கதாநாயகனாக (ஹீரோக்களாக) இராணுவ வீரர்களை நிலைநிறுத்திக் கொள்வதாக இருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளத்தின் தலைவர் கலாநிதி விமல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளத்தினரால் யாழ். கீறின் விடுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவம் வழங்கும் தலமைத்துவப் பயிற்சியில் என்ன நடக்கிறது என்று இதுவரை எமக்கு தெரியாது. இராணுவ முகாம்களில் மாணவர்கள் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்பது கூட எமக்குத் தெரியாமல் இருப்பது பெரும் அபத்தமாகும்.
தலமைத்துவப் பயிற்சியில் உள்ளடங்கிய விடையங்கள் என்ன? மாணவர்களிடையே தலமைத்துவம் இல்லையா? தலமைத்துவம் என்பது தெரியாமல் தானா பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் வந்துள்ளார்கள் என அரசாங்கம் நினைக்கிறது இது தவறாகும்.
பல்கலைக்கழக கல்வியானது ஒரு நெருக்கடியான சூழலில் தற்போது சென்றுகொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களது கல்வியில் அமைச்சர்கள் தலையிடுவது கல்வியின் சுயாதியத்தைப் பாதிப்பதாக இருக்கிறது.
அரசாங்கமானது ஏன் இவ்விதமாக நடந்து கொள்கின்றது எமக்குப் புரியவில்லை.
பல்கலைக்கழக கல்வியின் தரத்தை நிலை நிறுத்துமாறும் மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்குமாறும், எமது பதவிநிலைகளுக்கு ஏற்ப சம்பள உயர்வுகளை ஏற்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.
ஆனால் அக்கோரிக்கைகளுக்கு எமக்கு சாதகமான பதில் தரப்படவில்லை. இதனால் யாழ்ப்பாணத்தில் அனைத்துப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைதி பேரணி ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .