2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் பல்கலை ஆசிரியர்கள் பேரணி

Kogilavani   / 2011 ஜூலை 08 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், கவிசுகி, தாஸ்)

அகில இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்கள், மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக விளக்கும் வகையிலான பேரணியும் , கருத்தரங்கும்  யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன .

யாழ். புகையிரத நிலைய முன்றலிலிருந்து இப் பேரணி ஆரம்பமாகி யாழ். வீரசிங்கம் மண்டபம் வரை சென்றது. அதன்பின்பு வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் கலாநிதி க.விக்கினேஸ்வரன் தலைமையில் கருத்தரங்கு இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் குமரசிறிலியனகே, திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மலிந்த மென்டிஸ்,  கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மல் ரஞ்சித், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரபாத் ஜெயசிங்கா, கொழும்பு ஜயவர்தனா பல்கலைக்கழக விரிவுரையாளர் வண தம்மத்ததேரோ, றுகுணு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனுரகுமார, றுகுணு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அறிவழகன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் சிவநாதன், வவுனியா வளாக விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ரவி, பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பி.கைலாசபதி மற்றும் தொழிற்சங்கப் பிரமுகர் சிவபாலன் உட்பட  பலர் கலந்து கொண்டார்கள். 

   


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X