Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூலை 10 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் முன்னணியின் தலைமை குழு நேற்று சனிக்கிழமை இரவு கூடி எடுத்துள்ள முடிவை அறிவித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 23ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் வழங்க போகும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதற்கு இரண்டு அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அப்பாவி தமிழ் மக்களின் பாரிய உயிர் இழப்பு தொடர்பான போர் குற்றச்சாட்டுகளை சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் சுதந்திர ஊடகங்களும் ஆதாரப்பூர்வமாக முன்வைத்திருப்பதன் காரணமாக உலகின் கவனம் கணிசமான அளவில் இலங்கையின்பால் இன்று திரும்பியிருக்கின்றது.
இரண்டாவது, புலிகளின் ஆயுத போராட்டத்தின் தோல்வியை தமிழ் மக்களின் 60 ஆண்டு கால தேசிய போராட்டத்தின் தோல்வியாகவே மாற்றி முழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் திட்டமிட்டு இன்று முன்னெடுத்து கொண்டிருக்கின்றது என்றார்.
இந்த இரண்டு அடிப்படை காரணங்களையும் மனதில் கொண்டு தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வட கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்து உடன் பிறப்புக்களையும் நோக்கி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைக்குழு விடுக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
29 minute ago
33 minute ago