Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 11 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களை தங்கவைப்பதற்கு பெண்கள் பாதுகாப்பு தங்கும் நிலையமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள சிறுவர் விவகார மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ ஹரலியத்த தெரிவித்தார்.
வலிதெற்கு உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
யாழ். மாவட்டத்தில் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களை உடனடியாக வைத்துப் பராமரிப்பதற்கான இடங்கள் இல்லையென்ற விடயம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து மேற்படி பெண்கள் பாதுகாப்பு தங்கும் நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் ஊழியர்களுக்கு திஸ்ஸ ஹரலியத்த பணிப்புரை வழங்கியுள்ளார்.
ruthra Monday, 11 July 2011 05:11 PM
வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு முடியவில்லை. வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாப்பதற்கான இடமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எங்குச் செல்கின்றது நாடு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
30 minute ago
34 minute ago