Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 11 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மும்மொழிகளிலும் புலமை காரணமாக சர்வதேச ரீதியில் பலராலும் அறியப்பட்டவர். தமிழுக்காக பல சேவைகளை ஆற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலை பீடத்தை உருவாக்க அடித்தளமிட்டவர். பல நூல்களை எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர். அமரரது நூல்களை வாசித்து அதன் ஆழத்தை அறிய வேண்டும். அது எவ்வாறு எழுதப்பட்டது, எந்த வகையில் உருவாக்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இதன்மூலமே அமரரது ஆளுமையை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
32 minute ago