Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூலை 11 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் எனவும் தமிழ் தேசிக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அம்மக்களிடம் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கோருகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற அக்கட்சியின் அக்கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கையை விடுப்பதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்.
இறுதிப்போரிலான அப்பாவி தமிழ் மக்களின் உயிரிழப்புகள் சம்பந்தமாக சர்வதேச கவனம் இலங்கை மீது திரும்பியிருக்கின்ற இன்றைய சூழலில், போரின் பின்னரான இன்றைய சூழலில் முழு நாட்டையும் சிங்கள பௌத்தமாக்கும் அரசாங்கத்தின் திட்டமிட்ட முன்னெடுப்புககளையும், சலுகை அபிவிருத்தி எனும் மாயையைக் கொண்டு பல ஏமாற்றிக்கொண்டிருப்பதையும், நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கான அரசியல் தீர்வைக்கூட கொடுக்க விரும்பாத அரசு என்பதை உலகறியச் செய்யவும் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளின் அநாகரீக செயற்பாடுகளை தோற்கடிக்கவும் இத்தேர்தலில் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
28 minute ago
32 minute ago